search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஐ ரெய்டு"

    குட்கா விவகாரத்தில் சிபிஐ ரெய்டு நடத்திய நிலையில், ‘தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். #GutkhaScam #VijayaBhaskar #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த சிபிஐ ரெய்டு தொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளதாவது:-

    குட்கா, பான்மசாலா தொடர்பாக நான் யாரையும் சந்தித்தது இல்லை. இன்று நடந்த சிபிஐ சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். எந்த விசாரணைக்கும் தயாராகவே உள்ளேன். குற்றச்சாட்டுகளை பரப்பி அரசியலில் இருந்து அகற்றிவிடலாம் என மனப்பால் குடிக்கின்றனர். 

    அரசியல் எதிரிகளால் உருவாக்கப்படும் சூழ்ச்சிகளை தகர்த்து வெற்றி பெறுவேன். குற்றச்சாட்டு எழுப்பியதாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார். தற்போதும் சொல்கிறேன் எனக்கு மடியில் கனமில்லை எனவே வழியில் பயமில்லை. இந்த பிரச்சனையை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வேன். 

    என விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    டெல்லி பொதுப்பணித்துறை மந்திரி வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ள நிலையில் ‘பிரதமர் மோடிக்கு என்ன வேண்டும்?’ என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லி பொதுப்பணித்துறையில் சமீபத்தில் கட்டிட பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி அந்த துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதனை சுட்டிக்காட்டி ‘பிரதமர் மோடிக்கு என்ன வேண்டும்?’ என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    டெல்லி ஆம் ஆத்மி அரசு செய்துள்ள நல்ல விஷயங்களை மக்களிடம் மறைக்கும் விதமாக மத்திய அரசு இவ்வாறு செய்கிறது என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது தொடர்பில்லாத வழக்கில் சம்பந்தப்படுத்தி போலீசார் மற்றும் டெல்லி அரசு சதி செய்வதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. 
    ×